Monday, 19 November 2018

ஆரம்ப பயிற்சி

வணக்கம் சிவயநம 🌞🙏🌙
நமது குழுவில் சித்தர்கள் வழங்கிய யோகத்தினை கடைபிடிக்க முயலும் அன்பர்கள் இயமம் நியமம் நியதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடித்து யோகம் பயிலுங்கள்

ஆரம்ப பயிற்சியாக

அமைதியான இடத்தில் விரிப்புகளை விரித்து, அந்த விரிப்புகளாக வெண் துகில், கம்பளி, தர்ப்பை போன்ற விரிப்புகளை பயன்படுத்துங்கள்.

உட்காரும் ஆசனங்கள்

பத்மாசனம், வீராசனம், வஜ்ராசனம், சித்தாசனம் இந்த நான்கு ஆசனங்களில் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து முதுகு கழுத்து தலை நேராக நிமிர்த்தி உட்காருதல் அவசியமாகும்.

ஆசனத்தில் அமர்ந்த பின்பு உங்களது
தாய் தந்தை குலதெய்வத்தை வணங்கி குருவையும் வணங்கி பயிற்சியினை ஆரம்பிக்கலாம்

குரு வணக்கம்

ஓம் ஆதி குருவே வருக சிவகுருவே வருக
கந்த குருவே வருக
பதினெண் சித்தர்களும் குருவாய் வந்து சிவயோகத்தினை அருளி வழிநடத்த உங்களது
திருத்தாள் பணிந்து உம்மை சரணடைந்து பணிகின்றேன் இவ்யோகத்தினை எந்த இடையூறும் இல்லாமல் காத்து எம்மை சிவயோகியாக்கி அருள வேண்டும்.
என்று வணங்கி

இரு 👁👁 கண்களையும் திறந்து 👃 மூக்கு நுனியை பார்க்க வேண்டும் மூக்கு நுனியில் இரு நாசி வழியாக உள் செல்லும் சுவாசத்தையும் வெளியே செல்லும் சுவாசத்தையும் கவனிக்க வேண்டும்.
அவ்வாறு கவனிக்கின்ற போது சுவாசத்தில் உருவாகும் சப்தத்தை உணர வேண்டும் அந்த சப்தம் ஆனது உள் செல்லும் பொழுது அம் என்ற சப்தத்துடனும் வெளிவருகின்ற பொழுது உம் என்ற சப்தத்துடனும் இயங்குவதை சும்மா இருந்து கவனித்து வாருங்கள் இந்த சுவாசமானது உங்களுக்கு இயல்பாக நடக்கக்கூடிய சுவாசத்தினை கவனித்தல் ஆகும்.

மூச்சு பயிற்சியினை போல் மூச்சை உள்ளிழுத்தல் கூடாது இயல்பாக சுவாசிக்கின்ற சுவாசத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் இதுதான் நீங்கள் யோகத்தில் நுழைவதற்கு உங்களைத் தயார் படுத்தக் கூடிய யோகமுறை இந்த யோகத்தினை தொடர்ந்து 48 நாட்கள் பயிற்சி செய்து வாருங்கள்.

உணவு முறைகள்

அரைவயிறு அன்னம் கால் வயிறு காற்று கால் வயிறு நீர் என்ற அளவுகளில்தான் நீங்கள் உணவு அருந்த வேண்டும்.

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கணக்காய் உண்டு வரவேண்டும்.

இதில் காலையில் இஞ்சி நமது ஆள்காட்டி விரலில் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி அதன் மேலுள்ள தோலினை நீக்கு மிக்ஸியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு அரைக்க வேண்டும் பின்பு அதில் 50 மில்லி அளவாக நீர் சேர்த்து மீண்டும் இரண்டு மூன்று சுற்றுகள் அரைத்தால் இஞ்சி கசாயம் கிடைக்கும் இதனை சற்று நேரம் அப்படியே வைத்திருக்க அதில் உள்ள கசடுகள் கீழே படிந்து விடும் மேல் உள்ள நீரினை வேறொரு டம்ளரில் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கலாம்.
அல்லது 250 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தேனினை சேர்க்க வேண்டும் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருக்க இஞ்சித் தேனூறல் கிடைக்கும் இதை ஆறாவது நாள் முதல் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் வீதம் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வர வேண்டும்.

கடும்பகல் சுக்கு

சுக்கின் மேல் தோலினை நிக்கி அல்லது சுண்ணாம்பினால் சுக்கின் மேல் பூசி வெயிலில் காயவைத்து மீண்டும் சுண்ணாம்பு பூசி மீண்டும் வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்த பின்பு அதனை நெருப்பில் சுட்டு எடுக்க சுண்ணாம்பு கருத்திருக்கும் இதனை இலகுவாக தட்ட சுண்ணாம்புடன் சுக்கின் மேல் தோல் நீக்கி விடும் பிறகு இந்த சுக்கினை சூரணம் செய்து மதிய உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் அளவாக எடுத்து சுடு நீரில் கலக்கி அருந்த வேண்டும்.

மாலையில் கடுக்காய்

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி மேலுள்ள தோலினை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும் இது கடுக்காய் சூரணம் இதனை இரவு உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் அளவு சுடுநீரில் கலக்கி அருந்த வேண்டும் இதுதான் நமது திருமூலர் கூறிய எளிமையான மனிதர்களும் பின்பற்றக்கூடிய மிக அருமையான நோய் நீக்கும் மருந்து.

நீங்கள் யோகத்தினை ஆரம்பிப்பதற்கு முன் ஆசனத்தில் அமர்ந்து இருபத்தியொரு முறை நாடி சுத்தி செய்துகொள்ள வேண்டும்

நாடி சுத்தி முறை

இடகலையில் பூரித்து பிங்கலையில் இரேசித்தல் பிங்கலையில் பூரித்து இடகலையில் இரேசித்தல் இது ஒரு சுற்று இதுபோல் 21 முறை இடது பக்கம் மூச்சினை இழுத்து வலது பக்கம் விட்டு வலது பக்கம் மூச்சினை இழுத்து இடது பக்கம் விட்டு பழக வேண்டும் இது அனைவரும் செய்யலாம்.

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...