Wednesday, 25 July 2018

அசபை யோகம்

அசபை யோகம்

அசபை அல்லது அஜபா யோகம் என்றும் கூறுவர். இவ்யோகத்தினை பயில விரும்புவோர் இயமம் நியமம் கடைபிடித்து ஆரம்பிக்கவேண்டும். சிவசிவ (ஆன்மா) மந்திரம் என்பதனை ஓம் அல்லது அம்சம் எனவும் கூறுவர். அம்சம் என்பது ஆவி(ஆன்மா)யின் மறை பொருள்.

இம் மறை பொருளான அம்சம் என்ற உயிர் இயக்கத்தை காணும் முறையை கேள்:

உயிர்ப்பு என்பது சுவாசம், சுவாசமானது உள்ளிருந்து வெளிவருங்கால் அம் என்னும் ஓசை உண்டாகும்.
சுவாசமானது  வெளியிலிருந்து உள்வருங்கால் சம் என்னும் ஓசை உண்டாகும். இதுவே சிவத்தின் மறைமந்திரம்.
இந்த மறை மந்திரமே ஊமை எழுத்து அல்லது பேசாத மந்திரம்.
வெறுமனே மூச்சை கவணித்தலை விட அதன் இயக்கத்தை உணர்ந்து அதிலே லயத்துடன் இயக்கமற்று ஏகாந்தத்துடன் இருப்பதே இறைநிலை தியானம்.
யாம் இதை இங்கு நீ உணர வேண்டும் என்பதற்காக கூறிவிட்டேன். இயம நியமத்துடன் ஒருநாளும் இடைவிடாது தொடர்ந்து ஒரு நாளைக்கு அதிகாலை, மாலை என இரண்டுகாலங்களில் ஒரு காலத்திற்க்கு 72 நிமிடம் என யோகம் பயிலுவாயின் இவ்வுலகில் சித்தனாய் வாழலாம்.

🌞🙏🌙

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...