Saturday, 28 July 2018

சித்தர்களின் ஞான யோக மையம்

இயமம் நியமம் கடைபிடித்து மனதை ஒருநிலைப்படுத்தி தன்னுள் சிவத்தை காணும் யோகம் சிவயோகம் இதுவே இராஜ யோகத்தில்  மேன்மையானது என்றும், கர்ம வினை அறுத்து முக்தி பெற சிறந்ததாக நம் சித்த பெருமான்கள் இச் சிவயோகத்தை தத்தமது ஞான பாடல்களில் வலியுறுத்தி உள்ளதை காணலாம்.

இதன் அடிப்படைகளைதான் நாம் இங்கு பல முறை பயிற்சியாக நமது  "சித்தர்களின் ஞான யோகம்" மையம் என்ற  வாயிலாக சித்தர்கள் கூறிய ஞான யோகமாகிய சிவயோகத்தை அனைவரும் பெற்று சிவகதி அடைய முயற்சித்து வருகிறோம்.

"கற்றது கைமண் அளவு"

எமக்கு உணர்த்தியதை எல்லோரும் உணரவேண்டும் என்ற வேண்டுதலோடு சித்தர்களின் பாதம் பணிந்தும் சிவனது திருவடி வணங்கியும் செயல்படுகிறோம்,

இங்கு "சித்தர்களின் ஞான யோகம்" என்ற WhatsApp குழுவின் வழியாக வலியுறுத்தியும் வருகிறோம்,

இது ஆரம்பம் முதல் நம் குழுவில் அங்கத்தினராக உள்ளவர்கள் அறிவர்.

சித்தர்கள் கூறிய ஞான யோகமாகிய சிவயோகத்தை இன்று பலரும் பல வழிகளில் மாற்றி இவர்கள் புதிதாய் கண்டுபிடித்தது போல வழங்கி வருகின்றனர், எதுவும் புதிதல்ல என்பதை உணருங்கள்.

சித்தர்கள் உரைத்தது அனைத்து சீவனே சிவன், உன் உடம்பில் இருப்பதும் சிவனே என்றறிய சிவயோகத்தை கடைபிடித்து
சிவ சிவ என்றிட சிவ கதி தானே என சூட்சமமாய் உணர்த்தினார்கள்.

ஆதலால்தான் நாம் ஆரம்பம் முதலே சூட்சமத்தை அறிய முயற்சியுங்கள் என கூறி வந்தோம்

அற்றது பொருந்த உற்றது விளங்கும்

இதுவே சத்தியம்
இதுவே நித்தியம்
இதுவே ஆனந்தம்

அனைவரும் இயமம் நியமம் கடைபிடித்து மனதை தன்னுள் அடக்கி சிவத்தை உணர்ந்து சிவகதி அடைய முயற்சியுங்கள் சித்தம் கைகூட சிவன் அவனை சிந்தையில் வைத்து எந்நாளும் தொளுது நில்லுங்கள்

இங்கு உரைத்ததில் நல்லவற்றை ஏற்றுக்கொண்டு அல்லவற்றை தவிற்க்க வேண்டுகிறேன்

சிவயநம🌞🙏🌙

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...