Saturday, 28 July 2018

நீயே அதுவாகிறாய்

தானே தானாய் இருந்த தத்துவமும் சகல கலையான பிராணணுயிர் நீதான்.

இதைவிட்டு வீணாகத் திரிந்தலைந்தால் பின் சொன்னவைகள் உன் பின்னால் தானாக வருமா?

மெய்யான பூரணத்தை விரும்பி வைராக்கியமாய் நில்.

சக்தியை அறிந்து உள்ளம் மகிழ்து பார்.

நீ தேடும் உலகம் வேறு எங்கோ இல்லை.

நீயேதான் உலகம்.

உனக்குள்ளேதான் உலகம் இருக்கிறது.

இவற்றை உணர்ந்து பார்

மூலக்கணலை தூண்டி தத்துவத்தை பார்.

அது நீயேதான்.

காலதனை பூரணத்தால் பற்றி அறிவதனை சார்ந்து கொண்டு மண் மீதில் தண்ணீர் ஊற்று.

அது விண் மீது ஏறி வாழும்.

இதற்கு நீ குரு பீடத்தில் நிற்க வேண்டும்.

அப்போதுதான் நெருப்பாறு மயிர் பாலம் தப்பாமல் மதியமுர்தத்தின் அருவியைக் காண முடியும்.

இதற்கு தெளிவான மன உறுதியும் வேண்டும்.

ஆராயாதே ஆராய்ந்து அந்தம் காணாது மாண்டவர் கோடி பேர்.

தத்துவத்தை உணர முற்படு

சிவயநம 🌞🙏🌙

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...