Saturday, 28 July 2018

தியானம்

சித்தர்கள் சொல்வதெல்லாம்,  “எதுவுமற்ற, எண்ணமற்ற, ஏகாந்த இறை நிலையே” யோகம் (தியானம்) என்பதாகும்.

சித்தர்களின் யோகக் கலைகளில்  சித்தர்கள் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல்
தியானத்திலே இறைவனைப் பார்த்தேன், பேசினேன், பயணம் செய்தேன், உயிர், கரு உருவானது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்போம். இவர்கள் அனைவருமே சித்த நிலையை அறியாத மூடர்களே!
என்பது சித்தர்கள் சொல்லும் வாக்கு.

இவர்கள் அனைவரும் கண்டதெல்லாம் தாரணையே.
தியானம் அல்ல!

தூக்கத்தில் நடந்தது நினைவிருந்தால் அது கனவு !
கனவு வந்தால் நாம் ஆழ்ந்து உறங்கவில்லை என்பதே உண்மை!

உண்மை இப்படி இருக்க, தியானப் பயிற்சிகள் என்ற பெயரில் தாரணையை மக்கள் மனதில் விதைத்ததின் விளைவாக சித்தர்களின் அறிய பொக்கிஷமான தியானம் இன்று பெரிதும் மக்களுக்கு சென்று சேராமல் உள்ளது. இது மாறவேண்டுமானால் சித்தர்களின் ஆசியோடு, உண்மையான நம்பிக்கையுடன் மனதை ஒருநிலைப் படுத்தி, சிவயோக பயிற்சியின் மூலமாக தியான நிலையை அடைய முற்பட வேண்டும்.

சிவயநம🌞🙏🌙

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...