திப்பிலி = திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோது இல்லாதது. குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், பித்தம், கோழை மூன்றறுக்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றினுள் கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. அதனை நீக்குவது திப்பிலி.
இதன் பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய அறுபகையும் அகன்று அறும்.
இதன் பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய அறுபகையும் அகன்று அறும்.
No comments:
Post a Comment